ஒரு பொன் காலை நினைவுகள் – இலக்குமி

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே !

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தோழியே ! என் தோழியே !

நாம் வளர்ந்ததைச் சொல்ல வார்த்தைகள் இல்லை –

நாம் ஆடியதை அளக்க அளவுகோல் இல்லை –

நாம் அனைவரும் ஓர் தாய் பிள்ளை ~

நமக்குள் என்றும் வேற்றுமை இல்லை !

அதனால் நம் நட்புக்கு வானமே எல்லை !

நம் பிள்ளைகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பு இனி இல்லை –

அதுவே எனக்கிருக்கும் பெரும் கவலை ~

அதற்கு இறைவா நீ தர வேண்டும் ஒரு நல்ல தீர்வை !

நிச்சயம் தருவாய் என நம்பி இறைவா உன்னை தஞ்சம் அடைகிறது என் நெஞ்சம் !!!

 

தோழி

என் கண்ணுக்கு விருந்தாகி

என் கவலைக்கு மருந்தாகி

நான் சுவாசிக்கும் மூச்சாகி

என் உடல் இம்மண்ணில் வாழ உயிராகி

என் உயிருக்கு உணவாகி

மொத்தத்தில் என்னை இயக்கும்

சக்தி அவள்!!

 

 

 

Leave a comment